Monday, November 5, 2012

நீயற்ற பொழுது


 
தனிமை
தன் கோப்பையில்
உன்னையே
திரும்பத் திரும்ப
ஊற்றிக் கொள்கிறது.


எங்கு தேடியும்
கிடைப்பதில்லை
உன் போன்ற ஒரு
மணப் பெண்

வாழ்க்கையை உன்னிடம்

பகிர்ந்த அளவுக்கு
யாருடனும்
பகிர முடியவில்லை


எல்லா மகிழ்ச்சியிலும்
துக்கத்திலும்
உனக்கு ஒரு
அழைப்புத் தர வேண்டும்
போலிருக்கிறது.


நீ இல்லாத உலகில்
எல்லாக் கதிரைகளும்
வெற்றிடமாகவே
இருக்கின்றது.


என் ரயில் பயண
பக்கத்து இருக்கையில்
இறுதிவரை
நீ அமரவேயில்லை.


















நாம் நடந்த தெருக்களில்
நினைவுகள்
மிதிபடுகின்றன.


நீ தந்த நட்பு
ஆத்ம நண்பனிடத்திலும்
கிடைப்பதில்லை.


எனக்காகவே
இருந்தவளை
எவனுக்கோ
கொடுத்து விட்டேன்


மறப்பதென்பது
இத்தனை கடினமென்று
நான் நினைத்திருக்கவில்லை


ஒரு குளிர்கால முத்தம்
நீ இல்லாமல்
வீணாகிப் போகிறது.