Thursday, February 10, 2011




















என்னைச் சூழ இருப்பது
நீ மட்டும் தான்















எப்படித் துரத்தினாலும்
போவதில்லை
உன் நினைவு..

















காலம் நகர்கிறது
நினைவுகளைப்
பின்தள்ளிவிட்டு...


















 உன்னை
விற்றுவிட்டு
எல்லாச் சந்தையிலும்
தேடுகிறேன்...





















தூரத்து நினைவென்றில்லாமல்
அருகிலிருந்தே கொல்கிறது
எல்லாம்...





















வயது தடுக்கி
உன் மடியில் விழுந்தது..

















வா
நனைவோம்
கண்ணீர்த் தூரலில்


























நான்கு
கண்களிலும்
ஒரே வலி..
















விடியல் போலத்தான்
உன் நினைவும்
எப்பவும்
இருந்து  கொண்டே இருக்கின்றது..
















உன்
ஓவியத்தில்
நான் கிறுக்கள்களை
வரைந்தேன்



























 நான்
ஒரு வியாபாரி
சோகங்களையே
விற்கிறேன்...

























கேள்விகளையே
உருவாக்குகிறோம்
பதில்களைத் தவிர்த்து...

















அதோ பார்!
தெருவெங்கும்
சிதறிக் கிடக்கிறது
பல கோடி நினைவுகள்















நுரைகளைச் சேர்த்தால்
அது
அலையாகாது

























நுளம்பு போல
நீ
நினைவுகளைக்
குடிக்கிறாய்.














 உன் நினைவுகள்
அதிக பக்கங்களைக்
கொண்ட புத்தகம்.























நம் உறவுக்கு
ஜீவ அவஸ்த்தை
என்று பெயர்
வைத்தேன்















பிரிவதில்
உனக்கு
நம்பிக்கையே
இல்லை

No comments:

Post a Comment