Sunday, March 4, 2012



ஓவ்வொரு அந்தியின்
அடர்த்தியையும்
நீ இல்லாமலேயே
ரசிக்கவேண்டியிருக்கிறது


ஜன்னலோரத்தில்
அமர்ந்தால்
மரமெல்லாம்
நீயாகத்தான் தெரிகிறாய்


ஆறுதல்
உன் குரல்தான்
இப்போது அதுவும்
கேட்பதில்லை


என் ஜன்னலைத் திறந்தால்
தெரிவது நீதான்


உன் மௌனத்தை
எப்படி போட்டோ
பிடிப்பது


நீ புல்லாங்குழலா
மூங்கிலா?


நான் முட்களையும்
ரோஜாக்களையும்
கொண்டு வந்தால்
நீ முட்களையே
தெரிவு செய்கிறாய்


குழந்தைகளுக்கு
பொம்மை மாதிர்
நீ எனக்கு


நேற்றைய இரவு
நீ சிரித்தது
போல இருந்தது


உன் நினைவுகளால்
வலை பின்னி
நானே சிக்கிக் கொள்கிறேன்


செல்போன் திரையில்
உன் பெயர் மட்டுமே
விழுகிறது


உன்னைப் பிரிய
மனசு விட்டாலும்
நீ விடுவதில்லை


நீ ஆசைகளை
வைத்துக் கொண்டு
காத்திருக்கிறாய்
நான்
கனவுகளை ஏந்திக் கொண்டு
பயணிக்கிறேன்..


என்னோடு பேசாமல்
உன்னால் இருக்க முடியாது
உன்னோடு பேசினால்
எனக்கு இருக்க முடியாது


எங்கோ போன நீ
இடறி எனக்குள்
விழுந்தாய்


இன்றொரு இசை
கேட்டேன்
அது உன்னைப் போல்
இருந்தது