Friday, May 6, 2011














வலிகளுடன்
வாழ்பவனிடம்
ஆறுதல்
கேட்கிறாய்...

















போட்டியும் நீ
பரிசும் நீ






















உன் நினைவுகளை
விற்று
வண்ணத்துப்பூச்சி
வாங்கினேன்

























நம் உயிர்
கண்ணீர் அருந்தி
வாழ்கிறது


















காற்று உன் பெயரை
ஏந்திக் கொண்டு
மூங்கில் துளைகளால்
வெளிவருகிறது.





















மரணம்
வாழ்க்கையின்
பிரதியாய்
இருக்கிறது

























கட்டிப் பிடித்துக் கொண்டு
கடித்தும் வைக்கிறாய்..





















இசை
முடிகையில்
வரும் மௌனம்
நீ


















நீ
என் நாட்குறிப்பு

























 கனவுகளை உடை
கை கோர்ப்போம்





















பிரிவுதான் சத்தியம்
மறுபடி எதற்கு
சேர்வது பற்றிய
கனவு...?
















இருப்பதென்னவோ
ஒரு துளி
நம்பிக்கைதான்
ஆயிரம் கனவுகளை
வளர்த்து வைத்திருக்கிறாய்