Thursday, January 20, 2011
















வேண்டுமானால்
என் நினைவுகளை
எடுத்துக்கொள்
என்னை விட்டுவிடு














வாழ்க்கை
அதன்பாட்டுக்குப்
போய்க் கொண்டிருக்கிறது..


























கவிதை
தந்தவள்தான்
கண்ணீரும்
தந்தால்....

















உன்
மருதானிச் சிவப்பு
எந்த இரத்தத்திலும்
இல்லை.

















 பூக்கள்
வளர்ப்பதை
விட்டுவிட்டு
முட்கள் வளர்க்கிறேன்..

















அதோ பார்
கடலுக்குள்
மழை பெய்கிறது..
                                                                            




















 நீ சோம்பல்
முறித்த போது
உடைந்தது நான்தான்..

























ஒரு
மீளாத்தனிமையை
பேரமைதி
போர்த்தியிருக்கிறது..





















என் போர்வையில்
உன் சிதைவுகள்..




















பேரிரைச்சல் போல்
ஒரு அமைதி

















தண்டவாளப் பூக்களில்
அமைதி கிழித்து ஓடுகிறது
ரயில்..
















உன்
நினைவுகள்
என் தோல்களில்
சாய்ந்திருக்கின்றன


























உன் ஏக்கங்களை
புதைத்து விடு
நம்பிக்கைகளை
நடுவோம்






















நீ
நினைவுகளைத்
துவைக்கிறாய்...



























இன்னும் கேட்காத
பாடல்
நீ

















வானம் இல்லை
நிலவு மட்டும்...

























இந்த அந்தி
அமைதியைப் போர்த்தி
நின் கூந்தலில்
உதிருது
ஒரு பிடி மௌனம்..


















புகைவண்டி
பயணிக்கிறது
நினைவு
தேங்கிக் கிடக்கின்றன..



















என் ஓவியங்களில்
நீதான் வர்ணம்..

























அன்றைய பகலில்
நீ வழியனுப்பவில்லை
பகல் கனத்த வெயிலைப்
பொழிந்தது











Saturday, January 8, 2011














உன்னை
நினைத்தால்
எல்லாமே மறந்து விடுகிறது.

















உன் பெயரே
கவிதைக்ககுத்
தலைப்பாகியது


















இந்தக் கோடையில்
மழையை ரசிக்கலாம்
வா என்கிறாய்
























உன்னை மறக்க நினைக்கும்
எந்தப் பிரயத்தனமும் தோல்வியிலேயே முடிகிறது























என் வீட்டு வாசலில்
உன் முற்றம்





















உன் எதிர் காலத்தை
நான் எப்படிச் சுமப்பது?





















வா..
என் கவிதைகளை
இருவருமாய்ச் சேர்ந்து
விற்போம்..

























நீயில்லாத நாளை
கனத்த வெறுமையைப்
போர்த்தியிருக்கும்


















உன்
கனவுகளை எரித்தே
குளிர் காய்கிறேன்..


















நிறைவேறாத கனவுகள்
வரிசையில்
நமது பெயரும் இருக்கிறது.






















காதலும்
கசப்பானதுதான்
முறிந்த கனவுகள் போல...
















இதற்கு மேலும்
ஓட முடியாது
நினைவுகளுக்கு
துரத்த வேண்டாம்
என்று சொல்

















மௌனத்தை விட அழகான
மொழி ஏது?