Saturday, June 18, 2011

















வாழ்க்கையின்
தீராத கனவுகளை
கண்ணீர்த்துளிகளை
வழித்துணையை
பேரின்பத்தை
கனவு
கொள்ளை கொண்டுவிட்டது






















சிறுகச் சிறுக
சேமித்த காதல்
மொத்தமாய்
விடை பெறும் நேரம்
என்னை நீ
வழியனுப்பி வைக்கும்
ஒரு
வெய்யில் பொழுது
















இனி உனதும் எனதுமான
தனிமையில்
ஒலிக்கப் போவது
பிரிவின் பாடல்


















நினைவுகளைத்
தந்துவிட்டு
நீ மட்டும்
செல்கிறாய்























என்
வழித்துணையில்
பக்கத்து இருக்கையில்
படுக்கையில்
நீயில்லாமல்
நினைவுகளுக்குப் பக்கத்தில்
மட்டும்




















ஒரு
நூற்றாண்டுத்
துயரின் அடியில்
புதைந்திருப்பது
அடர்த்திமிகு
ஒரு காதல்















நினைவுகளைச்
சேமித்து
தூபி கட்டு










வாழ்க்கையின்
நவ கவிதை
சோகங்களாலே
எழுதப்படுகிறது
என் சாதனைகளுக்குப் பின்
கடவுளுக்குப் பிறகு
உன் பெயரே
உச்சரிக்கப்படும்

வெறுத்துப் போன
இந்த அந்தியில்
சூரியன்
இருந்தால் என்ன
முறைந்தால் என்ன
















நீ
இல்லாத
சாலையில்
இப்போது
உன் பாடல் மட்டும்
கேட்கிறது


















உறவுகளை
முடித்துக் கொள்ள
முடிகிறது               
நினைவுகளை
யார் முடிப்பது..?







Friday, June 3, 2011

















நம் நட்பு
எந்தக் காதலிலும்
இல்லை


















பூக்களில் இல்லை
வாழ்க்கை






















தண்டவாளம் போல்
ஒரு நெருக்கம்













அன்பே!
உன் திருமணத்தில்
நானில்லை
மணமகன்

















மரணம்
நினைவுகளைக்
கொல்வதில்லை
















எப்போதும்
நீ
எனக்குப்
பக்கத்து இருக்கை

























நினைவுகள்
உன் அன்பில்
நனைகின்றன





















உன்னைத் தொலைக்கவும்
முடியாமல்
அணைக்கவும்
முடியாமல்...






















நினைவுகளைச்
சேர்த்து வைப்போம்
நாளைய
பிரிவுக்காய்























அருகில்
நீ
தொலைவில்
நான்

















மனதின்
கிழிஞ்சல்களை
உன்
நினைவுகளால்
தைக்கிறேன்





















உன் கடலில்
அலைகள்
இல்லை

















நீ
தினசரிப் பத்திரிகை
எந்த நாளும்
வந்து கொண்டே
இருக்கிறாய்























முடிந்த பிறகும்
கேட்கிறது
உன்
பாடல்


















உன் தேடலில்
நான்
கிடைப்பதேயில்லை























பிரிவு
ஒவ்வொரு சொல்லாய்
எழுதுகிறது





















உன்
குழந்தைத்தனம்
எந்தக்
குழந்தையிடமும்
இல்லை





















என்
நினைவுகளைத்
தவிர எல்லாவற்றையும்
எரித்து விட்டாய்





















வாழ்க்கையின் பாடல்
ஓயும் போது
ஆத்மானந்தம் அழுகிறது.


















என்னைக்
கேட்டவளுக்கு
கண்ணீர்
கொடுத்தேன்

















உனக்கும் எனக்கும்
இருக்கிறது
ஓரு அழுகை
வாழ்க்கையின் அந்தி வரை
அழ...





















இப்போது
விடுதலையே
விலங்காகியிருக்கிறது...
















அழியாமல்
இருப்பது
நினைவுகள்
மட்டும் தான்
















என்னை
மன்னி
உன்னை
விரும்பியதற்காக






















பிரிவின்
பாடல்
சத்தமாய்க்
கேட்கிறது





















அழுது கொண்டே
வாழ்க்கையை
அந்திபடுத்த
எப்படி உன்னால்
முடியுமோ?





















அழுவதைத்
தவிர
வேறென்ன செய்ய
முடிகிறது





















நீ
செய்த
மகா தவறு
என்னை நேசித்தது தான்.






















நீ
எனக்காகக்
காத்திருந்த
கனங்கள்
பொய்த்துப் போகுமென்று
நீ நினைக்கவில்லை
























உன்
நிம்மதியைக்
குடிக்கிறது
வெறுமை

























உன்
கண்ணீரிலும்
இருக்கிறது
அன்பு





















எதிர்பாராத
தருணமொன்றில்
எல்லாவற்றையும்
முடித்துக் கொண்டாய்
அல்லது
முடித்துக் கொண்டோம்

Friday, May 6, 2011














வலிகளுடன்
வாழ்பவனிடம்
ஆறுதல்
கேட்கிறாய்...

















போட்டியும் நீ
பரிசும் நீ






















உன் நினைவுகளை
விற்று
வண்ணத்துப்பூச்சி
வாங்கினேன்

























நம் உயிர்
கண்ணீர் அருந்தி
வாழ்கிறது


















காற்று உன் பெயரை
ஏந்திக் கொண்டு
மூங்கில் துளைகளால்
வெளிவருகிறது.





















மரணம்
வாழ்க்கையின்
பிரதியாய்
இருக்கிறது

























கட்டிப் பிடித்துக் கொண்டு
கடித்தும் வைக்கிறாய்..





















இசை
முடிகையில்
வரும் மௌனம்
நீ


















நீ
என் நாட்குறிப்பு

























 கனவுகளை உடை
கை கோர்ப்போம்





















பிரிவுதான் சத்தியம்
மறுபடி எதற்கு
சேர்வது பற்றிய
கனவு...?
















இருப்பதென்னவோ
ஒரு துளி
நம்பிக்கைதான்
ஆயிரம் கனவுகளை
வளர்த்து வைத்திருக்கிறாய்